மத்திய சங்க செய்திகள்



10/12/2013 அன்று டெல்லியில் 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது
 அவர்கள் தலைமையில் நமது மத்திய சங்க 
வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
புதுவை மாவட்டச்செயலர் தோழர்.காமராஜ் ஆகியோர்
 தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் 2014 முதல் வாரத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர்  நகரில் நடத்துவது.
  • அனைத்து மாவட்டங்களிலும் JCM தலமட்டக்குழு கூட்டங்களை விரைந்து நடத்துவது.
  • WORKS COMMITTEE - பணிக்குழு கூட்டங்களை பயனுள்ள வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தவறாமல் நடத்துவது.
  • மாநில, மாவட்ட மாநாடுகளை 2014க்குள் சிறப்புற நடத்துவது.
  • ஜனவரி 2014க்கான புதிய உறுப்பினர் சரிபார்ப்பை முழு மூச்சுடன் புது வீச்சுடன் மேற்கொள்வது. NFTEன் பலத்தை உரமாக்குவது.
  • தோழர்கள். கோபாலகிருஷ்ணன், சேஷாத்ரி ஆகியோர் மத்திய சங்கத்தின் சார்பாக கேரள மாநிலத்திற்கு பொறுப்பாளர்களாக செயல்படுவது.
  • (நன்றி: காரைக்குடி மாவட்ட சங்க இணையத்தளம்)